ஜூன் 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு ...முதல்வர் உத்தரவு

திங்கள், 31 மே 2021 (19:49 IST)
உலகம் முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் இந்தியாவில் இதன் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

அனைத்து மாநில அரசுகளும் மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் தீவிரக் கொரொனா பரவல் இருப்பதால், வரும் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் சுமார் 16 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

எனவே  ஆந்திராவில் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்