தானே, பிவண்டி கோன்காவ் பகுதியை சேர்ந்தவர் பப்பு(வயது50). இவரது மனைவி ராக்மா(40). பப்புவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மனைவி ராக்மாவிடம் பணம்கேட்டு துன்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பப்பு வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்தார். அவரிடம் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும்படி ராக்மா கூறினார்.
குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ராக்மா பணம் சேமித்து வைத்துள்ளதை தெரிந்துகொண்ட பப்பு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பண தர மறுத்து மனைவி தன்னிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பப்பு, ராக்மாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்தார். மேலும் அவர் ராக்மாவின் காதை கடித்து குதறினார்.