இந்தியாவில் குறைகிறது கொரோனாவின் தாக்கம்!!

வியாழன், 28 ஜனவரி 2021 (10:26 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,666 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,01,193 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 123 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,847 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,301 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின்  எண்ணிக்கை 1,03,73,606 ஆக உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்