ஒரே நாளில் 2,424 பேர் பாதிப்பு; 15 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

திங்கள், 10 அக்டோபர் 2022 (09:53 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

ALSO READ: அடுத்த சில மணி நேரங்களில் 6 மாவட்டத்தில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,424 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,14,437 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,814 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,57,544 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 28,079 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்