மீண்டும் மெல்ல அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

வியாழன், 31 டிசம்பர் 2020 (09:28 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில் புதிய கொரோனா பாதிப்புகளால் மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 21,822 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,02,66,674 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 299 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,48,738 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 98,60,280 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,57,656 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்