தொடர் தோல்வி எதிரொலி: கோலி, ரோஹித் சர்மாவுடன் மறு ஆய்வு கூட்டம் நடத்த BCCI முடிவு!

வியாழன், 8 டிசம்பர் 2022 (17:09 IST)
ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் மறு ஆய்வுக் கூட்டம் நடத்த பிசிசியை முடிவு செய்துள்ளது.
 

சர்வதேச கிரிக்கெட்டில்  மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் சமீப காலத்தில் டி-20 உலகக் கோப்பையில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது நடந்து வரும் வங்கதேச அணிக்கு எதிராக நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1  என்ற கணக்கில்  இழந்துள்ளது.

இந்த நிலையில்,  கத்துக்குட்டி அணியிடன் இந்திய அணி தோல்வியுற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி பங்களதேஷ் அணி த்ரில் வெற்றி
 
எனவே கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, உள்ளிட்ட வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் , என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண், ஆகியோருடன் பிசிசியை கட்டுப்பாட்டு வாரியம் மறு ஆய்வுக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

Edited By Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்