சிவில் சர்வீஸ் தேர்வு: டெல்லி மாணவி டினா டாபி முதலிடம்

புதன், 11 மே 2016 (05:40 IST)
அகில இந்திய அளவில் நடைபெறும், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் டெல்லி மாணவி டினா டாபி முதலிடம் பிடித்துள்ளார்.
அகில இந்திய அளவில், ஒவ்வொரு வருடமும், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கான தேர்வை மத்திய அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
 
இதில், 2015 ஆம் ஆண்டு, 1078 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில், அகில இந்திய அளவில் டெல்லி மாணவி டினா டாபி முதலிடத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை அத்தர் அமீல் பெற்றார். இதில், தமிழகத்தை சேர்ந்த மாணவி சரண்யா ஹரி 7 ஆம் இடம் பிடித்தார். 
 
இந்த தேர்வில் முதலிடம் பெற்ற, டெல்லி மாணவி டினா டாபி -க்கும், 7 ஆவது இடத்தை பிடித்த தமிழகத்தை சேர்ந்த சரண்யா ஹரி-க்கு அவரது பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்