மாணவியை துரத்திச் சென்று கோஷம்- பரவலாகும் வீடியோ ..வலுக்கும் கண்டனங்கள்

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:32 IST)
கர்நாடக மாநிலம் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாபுக்கு ஆதரவாக நூதன போராட்டங்கள் மேற்கொண்டதும், அவை சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  கர்நாடக  மாநிலம்  ஷைமோகாவில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய கல்லூரி  மாணவியை துரத்திச் சென்று ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டனர் மாணவர்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமான அந்த மாணவி தைரியமாக ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  நகர்ந்தார். இதுகுறித்து வீடியோ பரவலாகி வரும் நிலையில், மாணவர்களின் செயலுக்கு விமர்சனம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்