எதிர்க்கட்சியில் அமருவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை: அமைச்சர் பிரகலாத் ஜோஷி

திங்கள், 10 அக்டோபர் 2022 (10:35 IST)
எதிர்க்கட்சியில் அமருவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை: அமைச்சர் பிரகலாத் ஜோஷி
எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரையில் ராகுல் காந்தி மற்றும் சித்தராமையா கலந்து கொண்டுள்ளனர் என்றும் அந்த நடைபயிற்சியால் அவர்களுடைய உடல் நிலைக்கு சீர்திருத்தம் ஏற்படும் என்றும் நாட்டிற்கு எந்த நலனும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்
 
ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது கூட தகுதி இல்லாத நிலையை அடைந்துள்ளது என்றும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் 388 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது என்றும் கூறியுள்ளார். ராகுல் காந்தி தற்போது நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அதனால் அவருடைய உடல்நிலையில் சீர்திருத்தம் ஏற்படும் என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார்.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்