இன்னும் டாடா ஏர் இந்தியாவை வாங்கவில்லை… மத்திய அரசு தறுப்பு!

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:39 IST)
டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிவிட்டதாக வெளியான செய்தியை மத்திய அரசு தரப்பு மறுத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தனியார் வசம் செல்ல இருப்பதை அடுத்து இந்த நிறுவனத்தை வாங்க ஏலம் எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க விருப்பம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ஏலத்தொகையையும் டாடா குழுமம் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை ஒன்றிய அமைச்சர்கள் குழு ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதை மத்திய அரசு தரப்பு மறுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்