காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் இதுபற்றி பத்திரிக்கையாளர்களிடம் நேற்று பேசிய போது “மோடி, தனது ஆட்சியில் ஊழல் எதுவும் நடக்க வில்லை என்று கூறுவது பொய். அவர் பதவி ஏற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக டெல்லி அசோக் விஹார் பகுதியில் இருக்கும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள 59 கணக்குகளில் ரூ.6,172 கோடி முன்கூட்டியே செலுத்தப்பட்டிருந்தது. அந்த பணம் ஹாங்காக்கில் உள்ள சில நிறுவனங்களுக்கு போன வருடம் அனுப்பிவைக்கப்பட்டது.