நடிகர் சஞ்சய்தத் பரோலில் மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (01:42 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.
 

 
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சஞ்சய்தத்-க்கு, நீதி மன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, புனே எரவாடா சிறையில் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.
 
இந்த நிலையில், சஞ்சிய்தத் மனைவி உடல் நலம் இன்றி இருந்த காரணத்தினால், கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில், தனது மகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் தனக்கு மீண்டும் 30 நாள் பரோல் கேட்டு சஞ்சய்தத் நீதி மன்றத்தில் விண்ணுப்பித்தார். இதற்கு நீதி மன்றமும், மகாராஷ்டிர உள்துறை அமைச்சகமும் அனுமதி வழங்கியது. இதனால், எரவாடா சிறையில் இருந்து சஞ்சய்தத் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்