நேரு, காந்தி குடும்பத்தினர் மீது மக்கள் காரி துப்புவார்கள்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

புதன், 25 மே 2016 (15:08 IST)
பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அடிக்கடி சர்ச்சைக்கு உரிய விதத்தில் பேசி பிரச்சனைகளில் பேசி மாட்டிக்கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடியே ஒருமுறை இதனை கண்டித்துள்ளார்.


 
 
ஜவஹர்லால் நேரு பலகலைக்கழக விவகாரத்தில் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ ஞான்தேவ் அகுஜா,  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பாலியல் குற்றங்களின் மையமாக செயல்படுவதாகவும் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள், ஆணுறைகள்  நாள்தோறும் தூக்கி வீசப்படுவதாக கூறி ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, நேரு, காந்தி குடும்பத்தினரின் சிலைகளை தகர்த்து கீழே வீசினால் மக்கள் அதன் மீது காரி துப்புவார்கள் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்