மாட்டுப்பாலில் தங்கம் உள்ளது – பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு !

புதன், 6 நவம்பர் 2019 (09:50 IST)
மாட்டுப்பாலில் தங்கம் கலந்திருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பாஜக தலைவர்கள் பசுக்களைக் காப்பதே தங்கள் லட்சியம் என சொல்லி வருகின்றனர். அதற்காக பசுவின் சிறுநீர் கேன்ஸரைக் குணப்படுத்தும் எனவும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் சொல்லி வருகின்றனர். இவையனைத்தும் இணையதளங்களில் கண்டனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய திலிப் கோஷ் ‘ இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலந்துள்ளது. அதனால்தான் அது மஞ்சள் நிறத்தில் உள்ளது. அந்த பால் ஒரு சிறந்த நோய் தடுப்பு மருந்து. பாலை மட்டுமே குடித்து ஒருவர் உயிர் வாழமுடியும். வேறு உணவு எதுவும் தேவையில்லை.’ எனப் பேசினார்.

அவரின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்