பாஜக நிர்வாகி கைது!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:19 IST)
பணமோசடி தொடர்பாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி பாஜக பெண் நிர்வாகியும், டிக் டாக் என்ர சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான தம்பதியகள் காயத்ரி- ஸ்ரீதர் ஆகிய இருவரும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.44 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தம்பதியரில் ஸ்ரீதர் தனியார் கல்லூரியில் பேரசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்