டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக அவரும் அவரது மனைவி மிஷேலும் மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூ விமானப் படை தளத்தில் இருந்து 'ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் நேற்று இந்தியா புறப்பட்டனர். அவர்களுடன் மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் புறப்பட்டனர்.