ராகுல் காந்தி அயோத்தியில் தங்க இடம் கொடுக்க தயார்: சாமியார்கள் அறிவிப்பு..!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (08:12 IST)
ராகுல் காந்தி தாங்குவதற்கு அயோத்தியில் வீடு தர தயார் என சாமியார்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் விரைவில் வீடு மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்கள் ராகுல் காந்திக்கு தங்களுடைய வீட்டை தர முன்வந்துள்ளனர். இந்த நிலையில் அயோத்தியில் உள்ள சாமியார்கள் ராகுல் காந்தி அயோத்திக்கு வந்தால் அவருக்கு வீடு தயார் என தெரிவித்துள்ளனர். 
 
அயோத்தியை சேர்ந்த சாமியார்களாக நாங்கள் இந்த புனித நகருக்கு ராகுல் காந்தியை அழைக்கிறோம் என்றும் அவர் தங்குவதற்கு எங்களால் இடத்தை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். அயோத்தியில் உள்ள அனுமார் கோயிலில் ராகுல் காந்தி வழிபட வேண்டும் என்றும் இங்கு அவர் தங்க வேண்டும் என்று நாங்கள் விருப்பப்படுகிறோம் என்றும் ராகுல் காந்தி அயோத்திக்கு நிச்சயம் அயோத்திக்கு வேண்டும் என்றும் அவர் வந்தால் வரவேற்போம் என்றும் சாமியார்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்