முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (07:34 IST)
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமானதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
பிரதமர் நரேந்திரமோடி உள்பட அரசியல் தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். விரைவில் அவர் குணமாக வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
 
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்