எரிந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு! அதிர்ச்சியில் மக்கள்

சனி, 30 நவம்பர் 2019 (10:44 IST)
ஹைதராபாத்தில் பெண் டாக்டர் இறந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் மேலும் ஒரு எரிக்கப்பட்ட சடலம் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அதிர்ச்சி சம்பவத்தின் துயரம் மறைவதற்குள் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பெண் டாக்டர் எரித்துக் கொல்லப்பட்ட பகுதிக்கு சிறிது தொலைவிலேயே மற்றொரு பெண்ணும் எரித்து கொல்லப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு கொலை சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என சந்தேகமடைந்துள்ள போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரே மாதிரியாக இரண்டு பெண்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்