முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சௌத்ரி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் வந்தடைய ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
விமானத்தில் இருந்த அவரது உடமைகளை உடனடியாக இறக்கிவிட முடியாது என்ற நிலையில் மொத்த விமானமும் அவருக்காக காத்திருந்துள்ளது. பிறகு அவர் ஷாப்பிங்கை முடித்துவிட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளார். ஆனால், விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது.
இதனால் மீண்டும் விமானம் புறப்படுவதற்கான, அறிவிப்பு வரும் வரை விமானிகளும், பயணிகளும் காத்திருந்துள்ளனர். இதனால், விமானம் சுமார் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரேணுகா சௌத்ரி மறுத்துள்ளார்.