17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணை ஐம்பது டன் எடை கொண்டது. இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை ஏவ முடியும். துப்பாக்கி குண்டுகளின் வேகத்தை விட அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் இந்த ஏவுகணையை பிரதமரின் நேரடி உத்தரவின் பேரில் மட்டுமே ஏவு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அக்னி- 5 ஏவுகணை நமது ராணுவத்தின் பெரும் சொத்து. இதன் வெற்றிக்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் நான் சல்யூட் செய்கிறேன்“ என்று கூறியுள்ளார்.