இது குறித்து உ.பி. மாநில சட்டப்பேரவையின் பாஜக தலைவரான சுரேஷ்குமார் கண்ணா, கடந்த செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு தம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 41 பேரும் தம் ஒரு மாத சம்பளத்தை உ.பி. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் என அறிவித்தார்.
இதனால், அதன் சுமார் 200 விவசாயிகள் பல்வேறு கிராமங்களில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி கடந்த வாரம் தம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் உ.பி. மாநில எம்.எல்.ஏக்கள் அனைவரையும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்க உத்தரவிட்டிருந்தார். இதை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அன்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாகப் பிரித்தளிக்கும்படியும் கூறியிருந்தார்.