விருப்ப ஓய்வுக்குப் பின் அரசியல் கட்சியில் தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. எந்த கட்சி?

திங்கள், 27 நவம்பர் 2023 (17:15 IST)
தமிழக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் அவர் பிரபல அரசியல் கட்சியில் இணைந்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் என்பவர் கடந்த மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். அவரது விருப்ப ஓய்வை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது. 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த  விகே பாண்டியன், 2002 ஆம் ஆண்டு துணை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். 
 
இந்த நிலையில் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் அவருடைய கட்சியில் அவர் சேர்ந்துள்ளார்.  ஏற்கனவே  நவீன் பட்நாயக் அவர்களின் தனிச்செயலாளராக பணியாற்றிய போது அவருக்கு கட்சியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக பிஜு ஜனதா தள கட்சியில் சேர்ந்துள்ளதை முதலமைச்சர் நவீன் பட்நாவிக் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்து உள்ளார். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்