50% இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி!

சனி, 24 ஜூலை 2021 (20:21 IST)
வரும் திங்கட்கிழமை முதல் தலைநகர் டெல்லியில்  50% இருக்கைககளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரொனா வைரஸின் 2 வது அலை பரவியது.

இதனால் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது  கொரொனா இரண்டாம் அலையின் தாக்கல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் திங்கட் கிழமை முதல் அங்கு 50 % இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,வரும் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில், பேருந்துகள் 100% இயங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சினிமா துறையினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்