சொத்து குவிப்பு வழக்கு: கர்நாடக அரசு தரப்பு வாதத்தை தாக்கல் செய்தார் வழக்கறிஞர் ஆச்சார்யா

செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (17:01 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், கர்நாடக அரசு தரப்பு வாதத்தை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா இன்று பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக இருந்த பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
 
அதன்படி, அன்பழகன் தரப்பில் நேற்று 81 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கர்நாடக அரசு தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்