14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல நடிகர் கைது

வியாழன், 2 ஜூலை 2015 (04:20 IST)
மும்பையில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல நடிகர் நிலேஷ் நிர்பாவனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 

 
பிரபல தமிழ் நடிகரும், இந்தி டைரக்டருமான பிரபுதேவா மற்றும் வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஏபிசிடி 2.  இந்தப் படம் நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதால் சக்கைப்போடு போட்டது. இந்த படத்தில் நிலேஷ் நிர்பாவனே என்கிற டான்ஸர் நடிப்பு பலரையும் வியக்கவைத்தது.
 
இந்த நிலையில்தான், மும்பையில் வசித்து வந்த டான்ஸர் நிலேஷ் நிர்பாவனே, தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
 
அந்த சிறுமியின் பள்ளியில் அவளது நடவடிக்கையை கண்காணித்த, ஆரிசியை  இது குறித்து விசாரித்துள்ளார். மேலும், சிறுமியின் பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்தார். அவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது தான், டான்ஸர் நிலேஷ்  நிர்பாவனே மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
 
இதனையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர்கள் இது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறை டான்ஸர் நிலேஷ் நிர்பாவனேயிடம் தீவிர விசாரணை நடத்தி கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பரை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
டான்ஸர்  நிலேஷ் நிர்பாவனே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்