’பரபரப்பு’ - ஒரு ரூபாய்க்காக தர்ம அடி!

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (09:09 IST)
கர்நாடக மாநிலம் துமகூருவில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது.


 


அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிக்கு நடத்துனர் ஒரு ரூபாய் சில்லரை கொடுக்கவில்லை. இதனால் அந்த பயணி நடத்துனரை  ஆபாச வார்த்தைகளால் திட்டி கொண்டே வந்துள்ளார். இதை கேட்டு சக பயணிகள் எரிச்சல் அடைந்தனர். மேலும், அந்த பயணியை தகாத வார்த்தைகளால் சிலர் திட்டினர்.

அதை கேட்டு எரிச்சலான அவர் சக பயணிகளையும் திட்டிவிட்டு, பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை பேருந்து நெருங்கிய போது இறங்கி ஓட முயற்சி செய்தார். போபத்தில் சக பயணிகள் அவரை சுற்றி வளைத்த சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த பயணியை மீட்டு சக பயணிகளையும் சமரசம் செய்து அனுப்பினர். பின், கலவர காட்சி போல் காட்சியளித்த பேருந்துநிலையும் அமைதி நிலைக்கு திரும்பியது.

வெப்துனியாவைப் படிக்கவும்