பார்ட்டிக்கு வராத பாட்டியை பாடியாக்கிய பேரன்!!!

திங்கள், 22 ஏப்ரல் 2019 (15:44 IST)
ஹரியானாவில் பார்ட்டிக்கு வராத பாட்டியை பேரன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ரமாதேவி(70). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வசித்து வருகின்றனர். ரமாதேவிக்கும் மகன்களுக்கும் இடையே சொத்து விஷயத்தில் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.
 
இதற்கிடையே ரமாதேவியின் 22 வயது பேரன் விக்கி தனது பர்த்டே பார்ட்டிக்கு அவரை அழைத்துள்ளார். ஆனால் ரமாதேவி அந்த பர்த்டே பார்ட்டிக்கு செல்லவில்லை.
 
இதனால் ஆத்திரமடைந்த பேரன், இதுகுறித்து தனது பாட்டியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் பேரன் பாட்டியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விக்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்