ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் மகனை பிணத்தை 90 கிமீ பைக்கில் எடுத்து சென்ற தந்தை!

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:37 IST)
ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் இறந்த மகனின் பிணத்தைக் 90 கிலோமீட்டருக்கு பைக்கில் எடுத்துச் சென்ற தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் கிட்னி திடீரென பழுதாகி விட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது
 
ஆனால் ஆம்புலன்ஸ் அதிக பணம் கேட்டதால் அந்த பணத்தை தர முடியாது என்றும் குறைத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் பணத்தை குறைக்க முடியாது என்று கூறியதை அடுத்து வேறு வழியில்லாமல் தனது இன்னொரு மகனின் பைக்கில் தனது மகனின் பிணத்தைக் தோளில் சுமந்தவாறு 90 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்