SSLC பொதுத்தேர்வு ரத்து பற்றி ஒருமித்த கருத்து உருவாக்கப்படும்: கபில் சிபல்

புதன், 1 ஜூலை 2009 (09:14 IST)
நாடு முழுவதும் SSLC பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தை வெளியிட்ட அமைச்சர் கபில் சிபல், 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றியும், விருப்பம் உள்ள மாணவர்களை மட்டும் தேர்வு எழுத அனுமதிப்பது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அமைச்சர் கபில் சிபல் கருத்துக்கு நாடு முழுவதும் உள்ள கல்வி ஆர்வலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு கபில் சிபல் அளித்த பேட்டியில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் பிரச்சனையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்