டைனமைட் வெடித்து 8 பேர் பலி: கர்நாடகாவில் கோரம்!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (08:24 IST)
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் வெடிவிபத்து ஏற்பட்டத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கல்குவாரிக்கு டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறியதில் 15 - 20 கிமீ தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது. இந்த விபத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும், இந்த பயங்கர வெடிவிபத்தால் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தும், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் விரிசல் விட்டும் காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்