நாடு முழுவதும் கல்லூரிகளில் தேர்வு ஒத்திவைப்பு...யுஜிசி அறிவிப்பு

வியாழன், 19 மார்ச் 2020 (15:35 IST)
நாடு முழுவதும் கல்லூரிகளில் தேர்வு ஒத்திவைப்பு...யுஜிசி அறிவிப்பு

நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளில் மார்ச் 31 வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்கலைக் கழக மாநிலக் குழு தெரிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதுமுள்ள கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூஜிசி உத்தரவிட்டுள்ளது.
 
நாடு முழுவதும்  பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் வரும் மார்ச் 31 வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
 
யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்