கடந்த அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம்தேதி வரை அங்குள்ள பெடாபள்ளி, சின்னகலூர், பெடாகளுர், குண்டம் ஆகிய கிராமங்களில் 40 பெண்கள் காவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு, குடிசைகளை அழித்து விட்டும் காவலர்கள் சென்று விட்டனர்.