இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, மாற்றுத் திறனாளிகளுக்குச் சம வாய்ப்புகள் வழங்குவது, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது முழுமையான பங்கேற்பிற்கு வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய பங்கைப் பெற முடியாமல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.