நாக்பூரில் சிறுமியை கற்பழித்த சிறுவர்கள்

திங்கள், 27 ஜூன் 2016 (17:10 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 வயது சிறுமியை இரு சிறுவர்கள் உட்பட 3 சகோதரர்கள் கூட்டுசேர்ந்து கற்பழித்துள்ளனர்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கணேஷ் பேட் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்துக்கொண்ட அந்த பகுதியில் உள்ள 3 சகோதரர்கள் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர்.
 
பெற்றோர்கள் வீடு திரும்பியதும் அந்த சிறுமி அவர்களிடம் இச்சம்பவத்தை தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் கற்பழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர், 12 மற்றும் 17 வயதுடைய இருவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களின், மூத்த சகோதரனை(21 வயது) தேடி வருகின்றனர். 
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்