குஜராத்தில் கனமழைக்கு 22 பேர் பலி

செவ்வாய், 28 ஜூலை 2015 (23:50 IST)
குஜராத்தில், கன மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

குஜராத் மாநிலத்தில், வடக்கு குஜராத் பகுதியில், தொடர்ந்து கன மழை பெய்து  வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
 
இந்த கன மழைக்கு, பானஸ்கான்ந்தா மாவட்டத்தில் 4 பேரும், ராஜ்கோட், பதான், ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், சபார்காந்தா மாவட்டத்தில் ஒருவம் மழைக்கு  பலியாகியுள்ளனர். மொத்தம் 11 பேர் பலியாகியுள்ளனர்.
 
இதனையடுத்து, வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மைபடை  மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் ஆகியோர் விரைந்துள்ளனர். மேலும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய போர்க்கால அடிப்படையில், அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்