பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 2 வயது பெண் குழந்தை ஒன்று காணமல் போனதாக கூறப்பட்டது. அந்த குழந்தை நேற்று பஞ்சாப், லூதியானா ரயில்வே காலனியில் ஒரு பூட்டிய அறையில் அரை நிர்வாண நிலையில் தொண்டை நெரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டார்.
உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்து விட்டு, மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றதாக அவர் கூறினார். 2 வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த 14 வயது பையனையும் சம்பவம் நடந்த நண்பகல் முதல் காணவில்லை. சிறுமியை அந்த 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்திருக்கலாம் என காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சந்தேகிக்கின்றனர்.