ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் சியாச்சின் சிகரத்தில் 19,600 அடி உயரத்தில் ராணுவ நிலை அமைந்துள்ளது. இந்த ராணுவநிலை பனிச்சரிவில் மோசமான பருவநிலை காரணமாக, திடீரென புதைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பனிச்சரிவு நடைபெற்ற இடம் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை சியாச்சின் சிகரத்தில் இழந்த ராணுவ வீரர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துகிறேன் என்றும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆருதலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.