இதில், தங்க நகைகள் மட்டுமே ஆண்டுக்கு ஒரு டன்னை தாண்டி வருகிறது. இவ்வாறு வரும் தங்க நகைகள் மும்பையில் உள்ள ஒரு பிரபல தங்கசாலைக்கு அனுப்பி வைத்து, அங்கு உருக்கப்பட்டு, தங்க கட்டிகளாக மாற்றப்படுகிறது. பின்பு, பல்வேறு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்த 1,311 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது.