மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்படும் - நிதிஷ் குமார்
வெள்ளி, 4 மே 2012 (18:53 IST)
FILE
மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்படும் என பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென, அம்மாநில முதல் அமைச்சர் நிதீஷ்குமார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் . ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதனையடுத்து அவர், மத்திய அரசு பீகார் மாநிலத்திடம் நீண்டகாலமாக பாகுபாடு காட்டி வருவதாகவும், இந்நிலை இதுவரை மாறவில்லை எனவும் குற்றம் சாற்றியுள்ளார்.
பீகார் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து தகுதிகள் இருந்தும், மத்திய அரசு ஏற்காதது ஆச்சரியம் அளிப்பதாக நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து அளிக்கும்வரை தொடர்ந்து போராடப் போவதாகவும், இதனை புறக்கணிப்பது தொடர்ந்தால் பீகாரில் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்படும் எனவும் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் எச்சரித்துள்ளார்.