பாக் - இந்திய எல்லை வேலியை தாண்டி வீசப்பட்ட 5 லட்சம் ரூபாய்

சனி, 3 ஆகஸ்ட் 2013 (11:30 IST)
FILE
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் வேலியை தாண்டி வீசப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

ஜம்மு மாவட்டத்தின் சவானி எல்லை சோதனைச் சாவடியை அடுத்த ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 2 பேர் ஏதோ பொருட்களை வேலி வழியாக இந்திய எல்லைக்குள் வீசிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள், அந்த இடத்திலிருந்து சுமார் 4,96,000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை கைபற்றியுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்த இந்த கள்ளநோட்டு கட்டுகளை எல்லைக்கு இந்தப்பக்கம் வீசியது யார், என்னும் கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்