தீவிரவாதத் தொடர்பு: உ.பி.யில் 2 பேர் கைது

செவ்வாய், 17 நவம்பர் 2009 (16:18 IST)
பாகிஸ்தான் உளவாளி சயீத் அமீர் அலிக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கும், இதர ஆவணங்களைப் பெறுவதற்கும் உதவிய 2 பேரை உத்தரப்பிரதேச காவல்துறையின் தீவிரவாத எதிப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைக்காக நேற்றிரவு 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வேறு விவரங்கள் எதையும் இப்போதைக்கு கூற முடியாது என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளியின் உண்மையான பெயர் ஜப்பார் என்றும், அமீர் அலி இல்லை என்றும் உ.பி. போலீசார் கூறியுள்ளனர்.

அமீர் அலிக்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை வழங்கியது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்