டெல்லியில் நடந்த திருநங்கைகளின் மாநாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியானார்கள்.
கிழக்கு டெல்லியில் நந்த் நக்ரி பகுதியில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில், திருநங்கைகளின் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இறுதி நாளான நேற்று நூற்றுக்கணக்கான பேர் கூடி இருந்தனர்.
அங்கேயே உணவும் செய்யப்பட்டது. அப்போது சமையல் பகுதியில் இருந்து திடீரென்று தீ, மாநாடு நடந்த இடத்துக்கு பரவியது. இதனால் சமுதாய கூடத்தின் உள் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி 15 பேர் உடல் கருகி பலியானார்கள். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.