குஜராத் ஆளுநராக நியமிக்கப்பட்ட திவேதி மரணம்

சனி, 1 ஆகஸ்ட் 2009 (12:04 IST)
ுஜராத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட டி.என்.திவேதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

குஜராத் ஆளுநராக இருந்த நவல் கிஷோர் சர்மாவின் பதவிக்காலம் கடந்த ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக டி.என்.திவேதியை, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவித்தார்.

கடந்த வாரமே குஜராத் சென்று ஆளுநர் பதவியே ஏற்க திவேதி திட்டமிட்டிருந்தார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக பதவியேற்பதை அவர் தள்ளி வைத்தார்.

இந்நிலையில் அவருக்கு கல்லீரலில் அவருக்கு கோளாறு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஸ்ரீகங்காராம் மருத்துவமனையில் கடந்த 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

ஆனால் நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமானது. இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. திவேதியின் மரணத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்