காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா எச்சரிக்கை

Ilavarasan

திங்கள், 14 ஏப்ரல் 2014 (11:52 IST)
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றி பெற செய்ய வேண்டும். இல்லையெனில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி செல்ல தயாராக இருங்கள் என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு சோனியா ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சி இந்தியாவின் 11 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 11 மாநிலங்களிலும் 151 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள்கூட கிடைக்காது என்று கருத்துகணிப்புகள் கூறியுள்ளன. இதை மாற்றி காட்டவேண்டும் என்று சோனியா விரும்புகிறார்.
 
11 மாநிலங்களில் உள்ள 151 தொகுதிகளில் கணிசமான இடங்களைப் பிடித்தாலே போதும், ஓரளவு கவுரவமான இடங்களை கைப்பற்றி விடலாம் என்று சோனியா கருதுகிறார். இதை அமல்படுத்த அவர் தன் ஆலோசகர்கள் மூலம் 11 மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கும் ஒரு ரகசிய உத்தரவை எச்சரிக்கையாக விடுத்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றி பெற செய்ய வேண்டும். இல்லையெனில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி செல்ல தயாராக இருங்கள் என்பதே சோனியாவின் எச்சரிக்கை உத்தரவாகும்.
 
இந்த எச்சரிக்கையால் காங்கிரஸ் முதல்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோடி அலையை சமாளித்து எப்படி வெற்றி தேடி கொடுப்பது என்று அவர்கள் தவித்தப்படி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்