கட்சியில் முக்கிய பங்குவகிக்க ராகுல் முடிவெடுக்க வேண்டும்: சோனியா

புதன், 18 ஜூலை 2012 (17:42 IST)
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகிக்க ராகுல்தான் முடிவெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி இன்று கூறியுள்ளார்.

அவர் என்னவாக வரவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது. அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது முறையாகத் துணை ஜனாதிபதியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீது அன்சாரி வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததும் சோனியா காந்தி நிருபர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

திக்விஜய் சிங் மற்றும் சல்மான் குர்ஷித் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தி கட்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்