உறவினர்களால் பள்ளி மாணவி கற்பழிப்பு; டெல்லியில் பயங்கரம்

வியாழன், 18 ஏப்ரல் 2013 (11:20 IST)
டெல்லியில் பத்தாம் வகுப்பு மாணவி உறவினர்கள் மற்றும் பக்கத்துவீட்டுகாரர்களால் காரில் கடத்தப்பட்டு கற்பழித்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

தெற்கு டெல்லி பகுதியில் சரோஜினி நகரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது மாணவியை அவளது உறவினரும், பக்கத்து வீட்டு இளைஞர்களும் சேர்ந்து காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர்.

மேலும் மாணவியை இந்த விழயத்தை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்த கொடூரத்தை தனது பெற்றோர்களிடம் கூற, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுப்பட்ட ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்