பொங்கல் பணம் ரூ.1000 வங்கியில் செலுத்தப்படுகிறதா? அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:58 IST)
பொங்கல் பரிசுப்பணம் ரூபாய் ஆயிரம் வங்கிகளில் செலுத்தப்பட வேண்டும் என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பொங்கல் பரிசு பணம் வங்கியில் செலுத்த வாய்ப்பில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சிவகங்கையில் இன்று நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.ம் அப்போது பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என்றும் நேரடியாகவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு கையில் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகள் தமிழக விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா நிவாரணத்தொகை  5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் பொங்கல் பரிசு தொகை கேட்டதாக அதிமுகவினர் தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்