திமுக தலைவர் ஆலோசனைபடி செயல்படுகிறார் சபாநாயகர்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (11:07 IST)
திமுக தலைவர் ஆலோசனைபடி செயல்படுகிறார் சபாநாயகர்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக தலைவரின் ஆலோசனைப்படி சட்டசபை சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சட்டசபையில் இன்று அமளி ஏற்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார் 
 
இதனை அடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரிலிருந்து இன்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செயல்படுகிறார் என்ற நடுநிலையோடு செயல்படும் சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுவதை நாங்கள் பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்