நீண்ட ஏற்றத்திற்கு பின் சற்று சறுக்கிய சென்செக்ஸ்: இன்றைய நிலவரம்

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (10:13 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் 63 ஆயிரத்தை தாண்டி சென்செக்ஸ் புதிய சாதனை செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை சுமார் 350 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில் தற்போது 62 ஆயிரத்து 920 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 105 புள்ளிகள் குறைந்து 18 ஆயிரத்து 705 என்ற மொழிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு சிறிய சரிவு ஏற்படுவது பங்குச் சந்தையில் வழக்கம் என்பதால் முதலீட்டாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும் தாராளமாக தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்